சர்தார்ஜிகளும் நீதிபதியும்
ஊரில்
உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த
சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை
நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று
ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை
கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார்.
நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.
கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர்.
எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”.
சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று
நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது
கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை
சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு
தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.
No comments:
Post a Comment